Showing posts with label Avvaiyar. Show all posts
Showing posts with label Avvaiyar. Show all posts

Thursday, October 8, 2015

Good Conduct(Nalvazhi) by Avvaiyar in English

I have already translated to English the great Tamil pedagogue Avvaiyar's Maxims for children(Athi Chudi),Time honoured wisdom (Moothurai) and the Nuggets of Avvai(Kontrai Venthan) in my blogposts. This post is a translation of Avvaiyar's Good conduct (Nalvazhi) for children. 

கடவுள் வாழ்த்து

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

Invocation

Oh elephant faced Lord..
Milk, honey, jaggery and lentils
I would offer you as a mix...
bestow me three classical Tamil forms (Prose, Verse and Drama)

மூலம்

1.புண்ணியமாம் பாவம்போம் போனநாள் செய்தவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்  

Verses

Previous life's merits and sins
bear fruits in this birth on earth
All religions enounce the same faith
Shun evil and do good deeds

2.சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
 
Just two classes live on earth..
based on equity and justice
The haves who give, are the upper class..
and the have-nots are the lower class

3.இடும்பைக(கு) இடும்பை இயலுடம்(பு) இது அன்றே
இடும்பொய்யை மெய்யென்(று) இராதே இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு 

This body is akin to a bag full of torments
Never believe it is everlasting
Help out others in need to attain bliss
Else destiny will betide you with misery

4.எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லால் கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 

One never does good deeds until
virtues dwell in him. It's akin to a blind flinging
his cane on a tree to yield the mango.
When virtues dwell in him, the mango will fall by itself.

5.வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமி(ன்) என்றால் போகா இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்  

Things you desire, you never get,
Things you want rid off, never leave you
But yearning them for too long
men lose sleep

6.உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்
கடலோடி மீண்டும் கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு 

Riches that you get is what you merit
however hard you try to earn like others.
You may sail vast seas seeking fortune
But you'll earn only what is destined for you.

7.எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

However you conceive, this bod is..
just a space for worms and diseases.
The wise know it and live unattached
Like drops of water upon a lotus leaf.

8.ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.  

Your travails to gain wealth may be many,
But never have you become rich unless destiny rules so.
Reverential people of this land, listen...
Even the wealth you have may not last long.

9.ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் ஏற்றவர்க்கு
நல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து 

The dry river bottom may be hot..
But the underneath spring may yield water
Likewise, even if noble men become poor
they never deny charity to those in need

10.ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) இட்டு உண்டு இரும். 

Even when one wails year after year,
The dead never come back. Stop wailing....
Every one goes the same way, until that day comes
Don't vex, feed the hungry, eat on and be your self.

11.ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.  

You can't miss a days food,
Turn down and take two days foods in one go,
You don't empathise my pain
You annoying stomach! It's hard to live with you!

12.ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.

The river side tree and a life..
best known to the king may fail.
But tilling your land for food is unmatched
All other walk of life has flaws.

13.ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல். 

Who can destroy the riches of a person
Or avert death of another.
Who can stop a guy begging
For all these are determined by one’s destiny.

14.பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும். 

Worse than begging is stating desires
for the sake of being fed by others
It's a shame to lose dignity for feed
Better give up life

15.சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.  

For those who pray Lord Siva
There's no peril on any day
This is the only profound path
Everything else is liable to fate

16.தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால் பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.  

The ground water source, charities by altruists,
Benevolence filled eyes and chaste women..
are all wonders of this world..
surrounded by sea on all sides 

17.செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் வையத்து
அறும்பாவம் என்ன அறிந்தன்று இடார்க்கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்?  

Blaming Gods for one’s sins
will not bring wealth.
Learn, not giving to charity when doable is sin
Will an empty pot boil over?

18.பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர் இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.  

Neither parents, children, relatives
make the stingy to give even if they cause hurt
Nor would they give
even when they surrender to them.

19.சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.  

Men adore, beg,cross oceans
laud ,reign earth, euologise others
to rid off hunger and just for the sake of ..
a measure of rice .

20.அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.  

Flirts with loose women is akin to
crossing river tied to a grinding stone
It's neither good for this life nor for the after life
It'll sow the seeds for penury

21.நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும்சிவந்த தாமரையாள் தான்.  

Water source, a roof, heap of grains
Name, fame, opulence, wellness
are all bestowed for ever to equitable by
red lotus seated goddess of wealth.

22.பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டிங்கு
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.  

You conceal your hard earned money
Listen ruined men ...
once your soul leaves the body ..
who will enjoy your riches

23.வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.  

Demons take shelter, white Madar blooms ..
deadly creepers grow, snakes inhabit
misfortune and adversity strikes
the house of those who bear false witness

24.நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை.  

A forehead sans a sacred mark
Food sans ghee, a town sans a river
A guy sans a sibling and a house
sans a spouse are all worthless

25.ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.  

If the spend is more than the garner
you lose esteem, rationale and become ...
a thief  to everyone ,sinner in all births and..
the virtuous shun you as wicked .

26.மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.  

Esteem, class, education, might, cognition
Philanthropy, austerity, majesty, persistence
lewd for sweet nothings of women..
all these ten would vanish when hunger strikes

27.ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.  

Aspiring for a thing and getting something else..
Receiving a thing one longed for...
Receiving something when least expected..
are all the works of Almighty who reins me.

29.உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.  

A measure of rice and a bit of cloth is suffice
But one desires for millions of things.
Life of people who do not realize this
is like a brittle clay pot and is filled with woes

29.மரம்பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை சுரந்தமுதம்
கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 

When trees are abound with ripe fruits
None invite bats to feed on them
Like a cow giving milk to calf.. if one gives
whole world will claim kinship.

30.தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரை யோன் பொறிவழியே வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 

O King! an offender need not be punished
even if the whole country wants it
One can not escape agonies
For his past sins decide his fate

31.இழுக்குடைய பாட்டிற்(கு இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.

Good melody would make amends for a flawed poem
Good morlas are worthier than being in upper class
Unending sickness is better than false valour
Staying  single is better than having an ignonimous wife

32.ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து. 

River flow creates mounds and pits beneath
Likewise riches wax and wane
So charity and good deeds alone
will increase the merit of ones life

33.வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 

An arrow can pierce an elephant
but not a pack  of soft cotton
A rock will resist a crowbar
but will give way  to soft roots
(Metaphor - Harsh words is futile .Use kind words)


34.கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா(து) அவன்வாயிற் சொல்.

If one is wealthier though not learned
every one would welcome him for his riches
If poor even his wife and mother would not want him
Even his words will not be accepted

35.பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு.

There are trees that bear fruit without flowering.
Likewise there are men who help without prompts
There are seeds that do not grow even when sowed
Like fools who do not heed even when apprised


36.நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் ஒண்தொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்
மாதர்மேல் வைப்பார் மனம். 

Crab, oyster and the plantain tree
lose their lives when bringing forth a progeny.
So does lust for a woman destroy
wisdom, wealth, and education of a person

37.வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை நினைப்பதெனக்
கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சே
விண்ணுறுவார்க் கில்லை விதி. 

To get over effects of previous birth sins
There is no advice in scriptures
So to protect you from the effects of past sins
Follow a virtuous life to get atoned.


38.நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.  

Searching for good, bad, self, other,
negative or the positive is all folly
Realize that in you lies the answer
Searching outside oneself is futile


39.முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்பும்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

Give up anger, jealousy and lust
before you are thirty and submit to God
Else your wisdom would become soft and supple
like the breasts of  an old woman


40.தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.  

Realise sacred kural of Valluvar, the four Veda's
sacred hymns of three Nayanmars,
Thiruvasagam, and scriptures of Thirumoolar
all speak one thing -extols the Lord .  .




Friday, June 6, 2014

Avvaiyar's Moothurai (Time honoured wisdom ) in English

Avvaiyar was an exceptional pedagogue who dished out percepts and dictum's that are germane even to this date . This post is a translation of Avvaiyar's 'Time honoured wisdom' (Moothurai ) by me .She uses simple comprehensible simile's and metaphors to explain moral principles.

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

Invocation 

Those who take unswerving refuge  .. ..
at the snouted Lord's feet would be blessed 
with solace, good soul and the grace of ..
Laskhmi the goddess of wealth 

நூல்

1.நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

Verses 

Never expect gratitude shown to be returned
for just as a rising unweary palm tree ..
returns water taken along feet (roots ) ..
through head (coconut) - one would return gratitude 

2.நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

Help given to grateful people are 
like an etch on  a rock - opposed to it...
help given  to insensitive people 
are  a writing on water 

3.இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.  

Affluence accrued in old age can not
relieve poverty suffered in youth
Similarly a nubile woman sans a lover
is like a flower bloomed past season 

4.அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.  

Overheated milk never loses taste 
A debauch will never be a good friend  
Noble men remain noble even in penury
like conch shells remain white even when burnt 

5.அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.  

Recurrent attempts don't succeed 
until the right time comes 
Even trees that grow taller don't..
bear fruits until the season comes 

6.உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான்.  

A person ready to lay his life- if needed...
be meek  to foes?- a load bearing column
will only break with excessive load ..
it would never bend or arc 

7.நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்.  

Just as lily rises to the level of water in a tank
One’s knowledge depends on the books he reads
One’s wealth depends on his previous birth’s virtues
One’s moral fibre depends on his race 

8.நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

It is good to see well-disposed people
It is good to listen to their counsels
It is good to talk about their lives ..
It is good to have them as friends

9.தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.  

It is harmful to see the wicked
It is harmful to listen to their counsels
It is harmful to talk about their character ..
It is harmful to have them as friends

10.நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யுமாம் மழை.  

Water poured out to paddy fields flows through canal
and does good to the grass in the bund.
Likewise if  a good man lives in this world...
it rains for his sake and does good to every one .

11.பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்.  

Though rice grows as a stalk of paddy..
it fails to grow if the husk is removed.
Even capable men cannot carry out a task
sans the help of  people around.


12.மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்.  

A pandanus leaf may be large but it is the spores that give fragrance 
Thus  judge not, one’s ability based on his stature....
for the sea is huge but not a drop is potable 
But water from a small spring can be potable

13.கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்.  

Large trees in woods are not the real trees.
Those who stand in a forum ....
not able to read and infer a beckoning gesture..
are the ones akin to real trees .

14.கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.  

An unlettered person writing a poem...
feigning to be a learned poet is..
like a turkey's  pretence as a peacock..
and trying to dance spreading its slimy wings 

15.வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்.

Just as the guy who treated the tiger...
turned as its grub -when cured of its illness ..
any help rendered to the intolerant ..
are futile like a pot dropped on a rock

16.அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

Never ignore  men with forbearance ..
and assume  they lack knowledge 
For the stork waits at the sluicegate patiently..
leaving small fishes  and waits for bigger fishes 

17.அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு.  

Birds leave the pond when it is dry
Likewise the unscrupulous abandon you in penury
But like the deep rooted water lily plants in pond 
steadfast people will provide you succor 

18.சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்?  

Hard times, do not change honourable men
What about others who aren't so ?
A broken golden pot is always precious 
But does a broken earthen pot has any value ?

19.ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

However deep a pot is immersed in  sea..
it can't  take water more than it can hold .
Even  a good husband and immense wealth
can not prevail over your fate 

20.உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.
Endogenic diseases kill you from within 
Don't count solely on kins and siblings 
Though not your sibling, the mountain
contains remedies that can cure you 

21.இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்-இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.  

You lack nothing when the wife tends home 
If the wife is harsh,it's better she stays away from home 
For house where such a wife stays ..
will become a tiger's den .

22.எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.  

Oh goose ! whatever happens is preordained 
One’s laid out plans doesn't work 
You expect a boon but you get a scourge 
It's all because of your past sins

23.கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.  

Wrath of heinous persons are like a rock cleft 
Wrath of noble men are like a fissure in gold 
Their anger bobs under like a scar...
made on water with an arrow 

24.நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.  

Just as a swan is seen in a lotus lake ..
the learned complement the learned 
The wicked reach out to the wicked 
like a crow that seeks a carcass 

25.நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு-நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.  

Venomous cobra hides in its lair 
but water snake moves around freely
Likewise deciets look for cover 
and honest men move around freely 

26.மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.  

If a king is weighed against a scholar 
the scholar outweighs the king ..
for the king is held in esteem only in his country
but the scholar is honoured where ever he goes

27.கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.  

For the ulettered words of wise men spell death
For the wicked, justice spell death 
For the plantain tree banana yield spells death ..
and a wife who always dissents bring a man’s death

28.சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று?  

Sandalwood retains its fragrance 
even when it becomes thin 
Likewise a mighty king,even if he loses his wealth
will never tend to be thrifty 

29.மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்- திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்.  

When dame luck favours you...
Kins, riches, good looks and elite status...
arrive at your door step.
All will be lost  when she leaves you 

30.சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.  

The tree gives shade ...
even to those who fell them 
Similarly  men of wisdom  protect
even those who hurt them



Sunday, May 4, 2014

Avvaiyar's Aathchudi maxims in English

Encouraged by the page views  and response I got for my English translation of Bharathi's  Aathi chudi, I have yet again made an humble attempt to translate immortal Tamil poetess Avvaiyar's pioneer work on Athichudi to English. Avvaiyar was a great Tamil poet who lived between 13th century .Avvaiyars 'Aathichudi' in Tamil is a  great literary work  aimed at educating the children. Even after  a millennium these are relevant today and taught to millions of Tamil Children all over the world. I consider Avvaiyaar as the world's first pedagogue .Apart from Aathi chudi Avvaiyaar wrote 'Kontrai venthan ' also a moral code of the highest order aimed at educating children.Other works of Avvaiyar are Moothurai and Nalvazhi . I have plans to translate these works also to English soon.


As is the wont, Avvaiyar begins with a couplet to invoke Lord Ganesha .

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

I also invoke Lord Ganesha's blessings for my humble effort to translate a great literary work .

Aathi flowers decked Shiva ..
adores Ganesha,let's invoke His grace .

Note : Athi is a mountain orchid flower (Bauhinia).Lord Shiva loves to be adorned with garlands made of Athi flowers .


1.அறம் செய்ய விரும்பு---Yearn to be virtuous.

2.ஆறுவது சினம்---Anger subsides.

3.இயல்வது கரவேல்---Do the good you can

4.ஈவது விலக்கேல்---Never prevent charity 

5.உடையது விளம்பேல்---Never brag 

6.ஊக்கமது கைவிடேல்---Never give up pep  

7.எண் எழுத்து இகழேல்---Never despise learning  (Learn to write and count )

8.ஏற்பது இகழ்ச்சி---Supplication is despicable  (Living on some one's generosity)

9.ஐயம் இட்டு உண்---Feed a destitute before you dine 

10.ஒப்புரவு ஒழுகு---Be equitable 

11.ஓதுவது ஒழியேல்---Never cease learning 

12.ஔவியம் பேசேல்---Speak no envy 

13.அஃகஞ் சுருக்கேல்---Never Short-change (Giving lesser quantity or treating unfairly )

14.கண்டொன்று சொல்லேல்---Never overstate what you see 

15.ஙப் போல் வளை.---Be pliable and accomodative (like the letter  ங )

16.சனி நீராடு.---Bathe before dawn  

17.ஞயம் பட உரை---Speak words that bring felicity 

18.இடம்பட வீடு எடேல்---Let not your home exceed your needs 

19.இணக்கம் அறிந்து இணங்கு---Befriend after ascertaining accord 

20.தந்தை தாய்ப் பேண்---Look after your father and mother 

21.நன்றி மறவேல்---Always be grateful 

22.பருவத்தே பயிர் செய்.---Raise stock on seasons (Do it at the right time )   

23.மண் பறித்து உண்ணேல்.---Never grab other's land ( for livelihood )

24.இயல்பு அலாதன செய்யேல்.---Never do aberrant deeds .

25.அரவம் ஆட்டேல்.---Never play with Serpents 

26.இலவம் பஞ்சில் துயில்.---Sleep on a cotton bed 

27.வஞ்சகம் பேசேல்.---Never indulge in deciet 

28.அழகு அலாதன செய்யேல்---Never do anything that is not aesthetic 

29.இளமையில் கல்.---Learn when you are young 

30.அறனை மறவேல்.---Never forget virtues 

31.அனந்தல் ஆடேல்---Avoid siesta

32.கடிவது மற---Refrain chiding others (harshly)

33.காப்பது விரதம்---Observe fasting 

34.கிழமை பட வாழ்---Be helpful to others 

35.கீழ்மை அகற்று---Rid off  meanness 

36.குணமது கைவிடேல்---Never abandon character 

37.கூடிப் பிரியேல்---Never part ways with friends 

38.கெடுப்பது ஒழி---Give up malice 

39.கேள்வி முயல்---Heed good counsel 

40.கைவினை கரவேல்---Preserve handicrafts 

41.கொள்ளை விரும்பேல்---Never encourage loot 

42.கோதாட்டு ஒழி---Give up unlawful games 

43.கௌவை அகற்று---Get rid of adversity

44.சக்கர நெறி நில்---Comply authorities 

45.சான்றோர் இனத்து இரு---Stay with the learned 

46.சித்திரம் பேசேல்---Never negate truth 

47.சீர்மை மறவேல்---Never forget ideals 

48.சுளிக்கச் சொல்லேல்---Never offend others 

49.சூது விரும்பேல்---Dislike gambling 

50.செய்வன திருந்தச் செய்---Be a paragon of perfection 

51.சேரிடமறிந்து சேர்---Pick out your associates 

52.சையெனத் திரியேல்---Let not others detest you 

53.சொற் சோர்வு படேல்---Never be indifferent in conversation 

54.சோம்பித் திரியேல்---Never be work-shy

55.தக்கோன் எனத் திரி---Merit your worth 

56.தானமது விரும்பு---Yearn to donate 

57.திருமாலுக்கு அடிமை செய்---Serve the Lord 

58.தீவினை அகற்று---Get rid of the evil 

59.துன்பத்திற்கு இடம் கொடேல்---Never give room for affliction

60.தூக்கி வினை செய்---Measure your deeds 

61.தெய்வம் இகழேல்---Never denigrate God 

62.தேசத்தோடு ஒட்டி வாழ்---Concur with your countrymen 

63.தையல் சொல் கேளேல்---Never heed naive counsels (தையல் refers to a girl aged between 5 and 7 -unenlightened)

64.தொன்மை மறவேல்---Never disregard antiquity

65.தோற்பன தொடரேல்---Never carry on, if defeat is certain 

66.நன்மை கடைப்பிடி---Adhere to good deeds     

67.நாடு ஒப்பன செய்---Let your deeds be worthy of acceptance 

68.நிலையில் பிரியேல்---Never loose your good repute

69.நீர் விளையாடேல்---Be wary of water sports 

70.நுண்மை நுகரேல்---Don't consume infected food 

71.நூல் பல கல்---Read diverse and varied books 

72.நெற் பயிர் விளை---Raise stocks  

73.நேர்பட ஒழுகு---Adhere to moral principles 

74.நைவினை நணுகேல்---Never be ruinous 

75.நொய்ய உரையேல்---Never denigrate

76.நோய்க்கு இடம் கொடேல்---Never become sick 

77.பழிப்பன பகரேல்---Never use uncomely language 

78.பாம்பொடு பழகேல்---Be wary of vicious people 

79.பிழைபடச் சொல்லேல்---Never incriminate 

80.பீடு பெற நில்---Stand tall with dignity

81.புகழ்ந்தாரைப் போற்றி வாழ்---Venerate the good Samaritan

82.பூமி திருத்தியுண்---Do farming (For sustenance)

83.பெரியாரைத் துணைக்கொள்---Keep company of seniors and wise people 

84.பேதைமை அகற்று---Wipe out ignorance 

85.பையலோடு இணங்கேல்---Never concur the unfledged  

86.பொருள்தனைப் போற்றி வாழ்---Protect and cherish wealth

87.போர்த் தொழில் புரியேல்---Never indulge in warfare

88.மனம் தடுமாறேல்---Never vacillate 

89.மாற்றானுக்கு இடம் கொடேல்---Never oblige your enemy

90.மிகைபடச் சொல்லேல்---Never exaggerate 

91.மீதூண் விரும்பேல்---Never be a glutton 

92.முனை முகத்து நில்லேல்---Never indulge in unrighteous fights 

93.மூர்க்கரோடு இணங்கேல்---Never agree with the overbearing 

94.மெல்லி நல்லாள் தோள் சேர்---Lean on your worthy wife 

95.மேன்மக்கள் சொல் கேள்---Listen to counsels from lofty

96.மை விழியார் மனை அகல்---Stay away from harlots 

97.மொழிவது அற மொழி---Be articulate 

98.மோகத்தை முனி---Dislike lust 

99.வல்லமை பேசேல்---Never vaunt about your might

100.வாது முற்கூறேல்---Never be the cause for a dispute 

101.வித்தை விரும்பு---Yearn to be adept

102.வீடு பெற நில்---Long for a quite life 

103.உத்தமனாய் இரு---Lead an exemplary life 

104.ஊருடன் கூடிவாழ்---Be well disposed 

105.வெட்டெனப் பேசேல்---Never be stern 

106 வேண்டி வினை செயேல்...Never harm deliberately

107.வைகறை துயிலெழு---Be an early riser 

108.ஒன்னாரைத் தேறேல்---Never trust your foes 

109.ஓரம் சொல்லேல்---Be unbiased